பூமியில் தான் மனிதன் உயிர் வாழ முடியும்


பூமியில் தான் மனிதன் உயிர் வாழ முடியும்


“(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவர்களுக்கு பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன” என்று இறைவன் கூறினான்.அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்து வெளிப்படுத்தப்படுவீர்கள்! என்றும் கூறினான்.
(அல்குர்ஆன் 7: 24,25) 
மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தின் மூலம் மனிதன் வாழ்வதற்கான தங்குமிடமும், வசதியும் பூமியில் தான் இருக்கின்றது எனவும் பூமியிலேயே மனிதன் வாழ்ந்து மரணிப்பது மட்டுமல்லாமல் அதிலிருந்தே மறுமையில் வெளிப்படுத்தப்படுவான் எனவும் தெளிவாகின்றது.மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமானவைமனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் காரணி ஒட்சிசனைக் கொண்ட வளி (காற்று). அதற்கு அடுத்த படியாக தேவையான உணவு, போதுமான சூரிய ஒளி, நீர், புவியீர்ப்பு சக்தி, இன்னும் பிற காரணிகள் அமைந்திருக்கின்றன.

 சூரிய ஒளி இல்லையெனில் பூமி குளிரானதாகவும், இருண்டதாகவும் இருந்திருக்கும். சூரியன் ஒளியையும், வெப்பத்தையும் மட்டும் வழங்கும் பொருள் அல்ல. மாறாக, நமக்கு உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியவசயமான சில பொருட்களையும் வழங்குகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் சூரியனால் ஏற்படுத்தப்படும் சக்தி. சூரிய சக்தியின் மூலம் உலகில் உயிர் வாழ்வதற்கு தேவையான ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் உணவாக உட்கொள்ளும் தாவர உற்பத்திக்கும் சூரிய ஒளி அவசியம். உலகின் சமநிலையான இயக்கத்திற்கு சூரிய ஒளி அவசியம். புவியின் மேற்பரப்பு 70% நீரினால் ஆனது. மனித உடல் கிட்டத்தட்ட 55% – 78%  நீரியால் ஆக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் மனிதனது சுவாசத்திற்கு அவசியமான ஒட்சிசன் 20.95% காணப்படுகின்றது.
ஏனைய கோள்களில் மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான காரணிகள் இருக்கின்றனவா?
சூரிய குடும்பம் என்பது சூரியனையும், சூரியனின் ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியது. சூரியனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின் படி) துணைக்கோள்களையும், மூன்று குறுங்கோள்களையும், அக் குறுங்கோள்களின் ஐந்து துணைக்கோள்களையும்,மற்றும் ஆயிரக்கணக்கான பிற பொருட்களாகிய வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அவையாவன:
சூரியன் (Sun)

சூரிய குடும்பத்தில் சூரியன் பெரிய கோளாகும். இது 70% ஹைட்ரிஜனையும், 28% ஹீலியமையும் கொண்டுள்ளது. இதன் வெப்பநிலை 5800 %.
புதன் (Mercury)

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு கோளாகும். மேலும், சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய கோளாகும். சூரியனிலிருந்து சராசரி தூரம் 57,910,000 km(0.387 AU). இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 87.23 நாட்கள் எடுக்கின்றது. இதன் மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீஃசெக்2. சராசரி மேற்பரப்பு வெப்பநிலை (நாள்) 623 K, சராசரி வெப்பநிலை (இரவு)103 K. இதில் ஒட்சிசன் அணுவாக 9.5% மும், மூலக்கூறாக 5.6% மும் காணப்படுகின்றது. புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. சில உள்ளகப் பகுதிகள் அநேகமாக உருகிய நிலையில் உள்ளன. புதன் சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளதால் அதிக வெப்பநிலையைக் கொண்டதாக இருக்கின்றது. இதன் காரணமாக உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. ஆகையால், மனிதனும் இங்கு வாழ முடியாது.
வெள்ளி (Venus)

சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்பும், சூரிய அஸ்தமனத்துக்கு பின்பும் வெள்ளி தன் உச்ச பிரகாசத்தை அடைகின்றது. இதன் சூரியனிலிருந்து சராசரித் தூரம் 108,208,930  km. மேற்பரப்பு ஈர்ப்பு 8.87 மீஃசெக2. சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 400 பாகை தொடக்கம் 740k. வெள்ளி புதனை விட சூரியனிலிருந்து இரு மடங்கு தூரத்தில் இருப்பினும் வெப்பமானது புதனை விட வெள்ளியல் அதிகம். இதில் கரியமில வாயு 96% மும், நைட்ரஜன் 3% மும் காணப்படுகின்றது. இது ஒரு முறை சூரியனை சுற்றி வர எடுக்கும் காலம் 224.7 நாட்கள். முன்னர் வெள்ளியில் பூமியைப் போன்று அதிகளவில் நீர் இருந்தது. ஆனால், தற்போது எல்லாம் வற்றிப்போயுள்ளது. இங்கு புதனை விட வெப்பம் அதிகமாதலால் இங்கும் உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, மனிதனும் வாழ முடியாது.
புவி (Earth)

சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ளய கோள். சூரியனிலிருந்து இதன் தூரம் 149,597,887.5km.  மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. புவியின் மேற்பரப்பு பல டெக்டோனிக் அடுக்குகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேப்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகின்றது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கோள்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்தக் கோள்களில் திரவ நீர் காணப்படுவதில்லை. எனினும், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது. இதன் சராசரி புவியீர்ப்பு சக்தி 9.780327 m/s2.  புவியின் அதிகூடிய மேற்பரப்பு வெப்பநிலை 56.7 0C  ஆகவும், அதிகுறைந்த மேற்பரப்பு வெப்பநிலை -89 0C ஆகவும் இருக்கின்றது. மேலும் நைட்ரிஜன் 78.08%, ஒட்சிசன் 20.95%, ஆகன் 0.93%, காபனீரொட்சைட்டு 0.038% ஆகவும் வளிமண்டலத்தில் காணப்படுகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 365.24 நாட்கள். மனிதனுக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான அத்தனை அம்சங்களும் புவியிலே உள்ளன. மனிதன் புவியில் வாழ்ந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே.
செவ்வாய் (Mars)

சூரியனிலிருந்து செவ்வாயின் தூரம் 227,940,000 km. இது சூரியனிலிருந்து நான்காவது கோள். இதன் சராசரி அதிகூடிய மேற்பரப்பு வெப்பநிலை 293M. மேற்பரப்பு ஈர்ப்பு விசை 3.71m/s2.  இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது. 95.32% காபனீரொட்சைட்டைக் கொண்டது. நைதரசன் 2.7% ஆகவும், ஒட்சிசன் 0.13% ஆகவும் இங்கு காணப்படுகின்றது. இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 686.98 நாட்கள் ஆகும். ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள் ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இது திரவ வடிவ நீர் என்பதால் நீர் ஒட்சிசனைக் கொண்டிருக்கும். எனவே% அதில் ஒரு செல் உயிர்% பக்டிரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள் வாழ்ந்திருக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கம் என்று விஞ்ஞானம் நம்புகின்றது.   இதில் ஆச்சரியமான விஷயம் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப் பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் ‘ட்ரை ஐஸ்’ எனப்படும் காபனீரொட்சைட்டு தான். இங்கு காபனீரொட்சைட்டே அதிகளவு காணப்படுவதால் மனித சுவாசத்திற்கு இங்கு வாழ்வது இடையூறாக அமையும்.
வியாழன் (Jupiter)

இது சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள கோளாகும். இது சூரிய மண்டலத்திலேயே மிகவும் பெரிய கேளாகும். சூடான பாறையையும், திரவ உலோகம் சிறிதளவைக் கொண்டிருந்தாலும் மேற் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் இல்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுக்கும்போது மிகப் பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில் மிக விரைவாக தன்னைத் தானே சுற்றிக் கொள்கின்றது. இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 4332.59 நாட்கள். சூரியனிலிருந்து இதன் தூரம் சராசரியாக 778,330,000 km.  புவியீர்ப்பு விசை போல் 2.5 மடங்கு விசை பெற்றது வியாழன். ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலம் நிரப்பப்பட்டுள்ள வியாழன் இவற்றின் கடும் அழுத்தத்தால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளான உள்ளகமும் (core) கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம் அதன் வௌ;வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமண்டலப் படைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் பாணப்படுகின்றது. வியாழனானது ஐதரசன் வாயுவை 89.8% ஆகவும், 10.2% ஹீலியமையும் கொண்டுள்ளது. மனித சுவாசத்திற்குத் தேவையான ஒட்சிசன் இல்லாத காரணத்தினால் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு இல்லை.
சனி (Saturn)

சூரிய குடும்பத்தில் ஆறாவதாக அமைந்த கோளாகும். இது சூரியனிலிருந்து சுமார் 1,429,400,000 km தூரத்தைக் கொண்டது. இது ஐதரசன் வாயுவை 93% ஆகவும், ஹீலியம் வாயுவை 5% ஆகவும் கொண்டது. இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 29 ஆண்டுகள் 167 நாட்கள் 6.7 மணித்தியாலங்கள். இது பாறை மற்றும் பனிக்கட்டியிலான சிறிய உள்ளகத்தையும் (core), அதைச் சுற்றி தடிப்பான உலோக ஐதரசன் அடுக்கையும் கொண்டது. இதன் மேற்பரப்பு ஈர்ப்பு விசை 8.96 m/s2. சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 93%. சனியின் சிறப்பான வளையங்கள் பெரும்பான்மையாக பனித்துகள்களாலும், பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. மனித சுவாசத்திற்குத் தேவையான ஒட்சிசன் காணப்படமையினால் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
யுரேனஸ் (Uranus)

சூரியகுடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்த கோளாகும். இது மூன்றாவது பெரிய கோளாகும். சூரியனிலிருந்து சராசரித் தூரம் 2,870,990,000 km. யுரேனஸ் ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 வளையங்கள் உள்ளன. இது தன்னைத் தானே சுற்றி வர எடுக்கும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அதாவது யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்ற 84 ஆண்டுகள் 3 நாட்கள் 15.66 மணித்தியாலங்கள் எடுக்கும்.  மேற்பரப்பு விசை 8.69m/s2.  யூரேனஸ் நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம்மேகங்கள் மீதேனால் ஆனவை. இங்கு நிலவும் குளிரான வெப்பநிலையும், மனித சுவாசத்திற்குத் தேவையான ஒட்சிசன் இல்லாமையாலும் மனிதன் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை.
நெப்டியூன் (Neptune)

சூரியனிலிருந்து எட்டாவதாக அமைந்த கோள். சூரியனிலிருந்து சராசரித் தூரம் 4,498,252,900 km.  மேற்பரப்பு வெப்பநிலை 50%. இது ஒரு முறை சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் 164 ஆண்டுகள் 288 நாட்கள் 13 மணித்தியாலங்கள்.  ஐதரசன் 84%, ஈலியம் 12%, மெதேன் 2% வாயுக்களைக் கொண்டது. மேற்புற ஈர்ப்புவிசை 11.0m/s2. ஓட்சிசன் அற்ற சூழ்நிலையால் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
பூமியின் துணைக் கோளான சந்திரனில் மனிதன் உயிர் வாழலாமா?
பூமிக்கு மிகவும் அருகிலுள்ள பூமியின் துணைக் கோளான சந்திரனில் மனிதன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றான். அங்கு சென்று மனிதனுக்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்று அணு அணுவாக ஆராய்கின்றான். ஒரு மனிதனுக்கு உயிர் வாழ்வதற்கு தேவையான அம்சங்கள் அவன் இருக்கம் இடத்திலேயே கிடைத்தால் தான் அங்கு அவனுக்கு உயிர் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது எனலாம். மாறாக, அவன் உயிர் வாழ அத்தியாவசியமான பொருட்களை அவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போய் தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தால் அவ்விடம் உயிர் வாழ்வதற்கு தகுந்த இடமாகக் கருதப்படமாட்டாது.
மனிதன் சந்திர மண்டலத்திற்கு செல்லும்போது தனக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான ஒட்சிசன், நீர், உணவுப் பதார்த்தங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு கொண்டு செல்கின்றான். இந்த நடைமுறை மனிதன் சந்திரனில் உயிர் வாழலாம் என்பதற்கான வறையறை அல்ல. எனவே, சந்திரனும் மனிதன் உயிர் வாழ்வதற்கு தகுந்த இடம் அல்ல.
எனவேää பூமியைத் தவிர வேறு எந்த கோள்களிலும் மனிதன் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று புலப்படுகின்றது. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக பின்வரும் குர்ஆன் வசனம் அமைந்துள்ளது.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.
(அல்குர்ஆன் 9: 36)
இதன் அடிப்படையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் படி பூமி, சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 365.24 நாட்கள். அதாவது கிட்டத்தட்ட 12 மாதங்களுக்கு சமனாகும். இதையே அல்குர்ஆன் ஆணித்தரமாக வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டு என்று கூறுகின்றது.
வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லா காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மனிதர்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு காலத்திலும் மக்கள் ஒவ்வொரு கணக்கெடுப்பில் இருந்தனர்.
விஞ்ஞானக் கணக்கு அல்குர்ஆனின் கூற்றோடு ஒத்துப் போவதைப் பார்த்தால் அல்குர்ஆன் இறைவேதம் என்பதில் அணுவளவேனும் சந்தேகமில்லை.
sltjweb.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை