உலகமயமாக்கலினால் உலகுக்கு நன்மையா?


உலகமயமாக்கலினால் உலகுக்கு நன்மையா?

உலகில் உள்ள ஏழை நாடுகளின் பஞ்சத்தைப் போக்கி அவைகளை பணக்கார நாடுகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக பணக்கார நாடுகளால் ஏற்படுத்தப் பட்ட ஒரு போலித் தத்துவம் தான் உலகமயமாக்கல் தத்துவம்.
அதாவது பணக்கார நாடுகளின் பண்ணாட்டு நிருவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவதும்,ஏழை நாட்டில் வாழும் மக்கள் பணக்கார நாடுகளில் குடியேறுவதும் தான் இவர்களின் தத்துவத்தின் முக்கிய பகுதி.
இந்தத் தத்துவம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
உலகில் உள்ள பணக்கார நாடுகளினால் 21ம் நூற்றாண்டின் சக்திவாய்ந்த பொருளாதாரக் கொள்கையாக பிரகடனப் படுத்தப் பட்ட இந்த உலகமயமாக்கள் இன்று வரை ஏழ்மையை போக்கும் சக்தியாக மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அனேகமாக எல்லா பணக்கார நாடுகளும் பூமியின் வடபுலத்தில் அமைந்துள்ளதும் தென்புலத்தில் அமைந்துள்ள ஏழை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் கசப்பான உண்மை. அவர்கள் எப்படி “பணக்கார நாடுகள்” ஆனார்கள்? மற்றவர்கள் எப்படி “ஏழை நாடுகள்” ஆக்கப்பட்டார்கள்? அது ஏழை நாடுகளில் வாழும் மூன்றில் இரண்டு உலக சனத்தொகை அவசியம் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும்.
உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள் திரளைப்போலஇ வசதியானவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்கின்றனர். ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வருபவர்களை பணக்கார நாடுகள் எப்போதும் இரு கரம் நீட்டி வரவேற்பதில்லை. தேவைப்படும் பொழுது பயன்படுத்தி விட்டு அபரிதமாகத் தேங்கி விடும் தொழிலாளரை வெளியே தள்ளுகின்றன. மேலும் “ஏழைகளின் படையெடுப்பை” கண்டு அஞ்சி புதுப்புதுச் சட்டங்களை போடுகின்றனர்.
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் கோபன்ஹெகன் நகரில் இடம்பெற்ற வறுமை ஒழிப்பு மகாநாடுஇ குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமையை ஒழிப்பதில் பணக்கார நாடுகளின் கடமை வலியுறுத்தப்பட்டது.
இருப்பினும் வறிய நாடுகள் மீது சுமத்தப்பட்ட கடன் சுமை குறையவில்லை. பணக்கார நாடுகள்இ வறுமை ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முடுக்கி விடுகின்றன.
பணக்கார நாடுகள் தமது நாடுகளுக்குள் புக முனையும் ஏழை அகதிகளைஇ குடியேறிகளைத் தடுக்க முயல்கின்றன. மறுபக்கம் தம்மை ஏழைப் பங்காளனாக காட்டிக்கொள்கின்றன. ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகள் யாவும்இ அவற்றைத் தம்மில் தங்கியிருக்க வைப்பதற்காகவே செய்யப்படுகின்றன.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டினுள் குடியேற விரும்புபவர்களை “பொருளாதார அகதிகள்” என குறிப்பிடுகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மேற்கு ஐரோப்பியர்கள் பொருளாதார அகதிகளாக அமெரிக்க,அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு படையெடுத்தார்கள்.
தாயகத்தில் நிலவிய வறுமை அவர்களைப் புதிய உலகம் நோக்கி குடிபெயர தூண்டியது. இரண்டாம் உலகப் போர் வரை ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வறுமை, இன்றைய அபிவிருத்தியடையாத நாடுகளின் நிலையை ஒத்தது.
ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் பத்து வீதத்திற்கும் குறைவானோரே செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் கொடிய வறுமைக்குள் உழன்றனர். ஐரோப்பிய வறிய மக்களின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல புரட்சிகளுக்கு வழி சமைத்தது. மேலும் பல எதிர்கால புரட்சிகளை தடுக்கும் நோக்கில் “நலன்புரி அரசு” உருவாக்கப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டது.
கிருத்தவம் செய்த கீழ்தரமான வேலை.   
தங்கள் மதத்தை பரப்புவதற்கு கிருத்தவம் பல வகையான யுக்திகளை கையாண்டது.பொய் சொல்லி மார்கத்தை பரப்புவது,(குருடன் பார்க்க வைக்கிறோம்.முடவனை நடக்க வைக்கிறோம்,செவிடனை கேட்ட வைக்கிறோம் என்று ஜப ஆராதனை என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது.)பணம் கொடுத்து மார்கத்தை ஏற்க்கச் செய்வது.ஐரோப்பாவின் முன்னேற்றத்திற்கு கிருத்தவக் கடவுல் என்று பொய்யை பரப்புவது.
இது போன்ற பல விதமான வேலைகளை செய்துதான் கிருத்தவத்தை பரப்புகிறார்கள்.கிருத்;தவ மார்கத்தில் உள்ள செய்திகளை கூறினால் கிருத்தவத்தில் உள்ள மக்கள் கூட அம்மார்கத்தை விட்டு போய்விடுவார்கள் என்பது அவர்களுக்கே தெளிவாகத் தெரிந்த உண்மை.
இந்த கிருத்தவ மத போதகர்கள் ஐரோப்பாவின் வளர்சிக்கு கிருத்தவ மதத்தின் கடவுல்தான் காரணம் என்ற பொய்யை கூறியதால் அதை நம்பிய பலர் தாமும் ஐரோப்பியரின் மதத்தை தழுவினால் இவற்றைப் பெறலாம் எனக் கருதினர். ஆனால் ஆண்டுகள் பலவாகியும் “ஐரோப்பியக் கடவுள்” தமக்கு நவீன கருவிகளை கொடுக்காததையிட்டு விசனமுற்றனர். தற்போது இந்த மக்கள் கிறிஸ்தவ மத உட்பிரிவை உருவாக்கி ஐரோப்பிய எதிர்ப்பாளராக மாறியுள்ளனர் என்பது கிருத்தவ மதத்திற்கு ஏற்பட்ட மிகக் கேவலமான ஒரு நிகழ்வாகும்.
இன்று மூன்றாம் உலக நாட்டு மக்களின் மனநிலை மேற்குறிப்பட்ட பசுபிக் தீவுவாசிகளின் மனநிலைக்கு ஒப்பானது. தன் பிள்ளை ஆங்கிலம் கற்றால் போதும். ஆங்கிலேயரைப் போல பணக்காரர் ஆகலாம் எனப் பல பெற்றோர் நினைக்கின்றனர்.
சில நேரங்களில் அவர்களது கனவுகள் நிஜமாகின்றன. ஆனால் அதற்கு காரணம் ஐரோப்பியமயமாகிய (அல்லது ஆங்கில மயமாகிய) வாழ்க்கைத் தரமல்ல. ஆங்கிலம் பேசும் அமெரிக்கா பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் மேன்நிலையில் உள்ளது. இந்த நாட்களில் தகைமை சார்ந்த தொழிலாளரின் பற்றாக்குறையை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புகின்றனர்.
19 ஆம் நூற்றாண்டில் காலனிகளை ஐரோப்பியமயப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. ஸ்பானிய, பிரெஞ்சு, ஆங்கில, மொழிகளும், கலாசாரங்களும் பரப்பட்டன. அங்கே ஏற்கனவே இருந்த பூர்வீக கலாசாரங்கள் நசு க்கப்பட்டன. அல்லது புறக்கணிக்கப்பட்டன.
கல்விக் கூடங்கள் ஐரோப்பிய கல்வி முறையை இறக்குமதி செய்தன. இவ்வாறே காலனிகளில் வாழ்ந்த மக்களின் மூளைக்குள் ஐரோப்பிய கலாசாரம் புகுத்தப்பட்டது. ஐரோப்பியமயப்பட்ட புதிய மத்தியதர வர்க்கம் தோன்றியது. அவர்களின் சேவைக்காக காலனிய அரசு அதிகபட்ச சம்பளத்தை வெகுமதியாக வழங்கியது. அதாவது காலனியில் சுரண்டிய பணத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் போய்ச் சேர்ந்தது.
ஐரோப்பிய காலனிகள் யாவும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஏற்கனவே வளர்ச்சியடைந்திருந்த தொழிற்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை தமது காலனிகளில் இருந்து பெற்றுக்கொண்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகளில் மக்களை அடிமைகளாக அல்லது குறைந்த கூலிக்கு அமர்த்தி திருடப்பட்ட மூலப்பொருட்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டன. அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயத்த உடைகள் பின்னர் அதே மக்களுக்கு விற்கப்பட்டன.
சுதந்திரமடைந்த முன்னாள் காலனித்துவ நாடுகள் தொழிலகங்களை நிறுவி முடிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பின. ஆனால் அப்போதெல்லாம் (ஐரோப்பாவை வந்து சேரும் போது) “இறக்குமதி தீர்வை” விதிக்கப்பட்டது. அந்த வரியை செலுத்திய பின்னர் விற்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.
ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் மூன்றாம் உலக நாடுகளின் பாவனைப் பொருட்கள் பல ஐரோப்பிய நிறுவனங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. இலங்கையில் வாங்கும் தேயிலையை பிரித்தானியக் கம்பனிகள் வாங்கிஇ பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விநி யோகிக்கின்றன.
பிரேசிலில் வாங்கும் காப்பி கொட்டையை சுவிஸ் கம்பனிகள்இ கவர்ச் சிகரமான போத்தல்களில் அடைத்து உலகம் முழுவதும் விற்கின்றன. அண் மைக்காலங்களில் இந்தியாவைச் சேர் ந்த பிரபல கம்பனிகள் சில ஐரோப்பாவில் முதலிட விரும்பின.
ஆனால் அவை கூட்டு ஒப்பந்தத்திற்கு அணுகிய ஐரோப்பிய கம்பனிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஐரோப்பிய கம்பனிகளின் பொருளாதார பலம் மிக அதிகமாக இருந்ததால் இந்திய கம்பனிகளை விலை கொடுத்து வாங்க மட்டுமே அவை விரும்பின.
பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும்  காப்பி கொட்டை இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை மத்திய அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் வாழைப்பழம். இவையெல்லாம்  ஐரோப்பாவிலோ  அல்லது அமெரிக்காவிலோ உற்பத்தியாவதில்லை.
ஆனால் அமெரிக்க – ஐரோப்பிய கம்பனிகளே மேற்படி உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. பெரும் மூலதனத்துடன் நடத்தப்படும் மேற்குலகப் பன்னாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தும் உலக சந்தையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல. இவை மூலப்பொருட்களை வழங்கும் மூன்றாம் உலக நாடுகள் உலக சந்தைக்கு வர விடாமல் தடுக்கின்றன.
இந்த பணக்கார நாடுகளின் இப்படிப் பட்ட கீழ்த்தரமான கொள்கைக்கு வைக்கப் பட்ட கவுரவமான பெயர்தான் உலகமயமாக்கல்.
இந்த உலகமயமாக்;கல் தத்துவத்தின் மூலம் உலகில் இன்று வரை ஏற்பட்டது நஷ்டமே ஒழிய இலாபம் இல்லை.அதனால் இந்தக் கொள்கையை நாம் அனைவரும் எதிர்க்கத் தான் வேண்டுமே தவிர ஆதரிக்கக் கூடாது.
மாற்றுப் பொருளாதாரக் கொள்கை என்ன?
இன்று உலகில் உள்ள பல நாடுகள் மாற்றுக் கொள்கைக்காண வழி கிடைக்காத காரணத்தினால்  பொருளாதார மந்த நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதைப் பார்கிறோம்.
மிக அண்மையில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ள அமெரிக்காவே மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டதை நாம் அறிவோம்.
ஐரோப்பா முழுவதும் பல நாடுகள் பொருளாதாரத்தில் திடீர் என்று இறங்கு முகம் கண்டன.
கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டன,பங்குச் சந்தை பல நாட்கள் இறக்கம் கண்டது.
இப்படி பல வளர்ந்த நாடுகள் பொருளாதார மந்த நிலையில் துவண்ட நேரத்தில்,இஸ்லாமிய பொருளாதார முறையைக் கைக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஒன்றும் தமக்கு நடக்காததைப் போல் இயற்கையாக இருந்தன.
இந்த நிலையைக் கண்ட ஐரோப்பிய ஒன்றியமே ஆச்சரியப் பட்டு சவூதியின் பொருளாதாரக் கொள்கையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அங்கு அனுப்பியதும்,அந்தக் குழு வட்டியில்லா இஸ்லாமிய பொருளாதாரமே உலகுக்கு சிறந்தது என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கம் சொன்னதையும்.இந்தியாவின் பிரபல பத்திரிக்கையான தி இந்து நாளிதல் எடுத்துறைத்ததை நாம் அறிவோம்.
ஆக இந்த உலகின் பொருளாதார மந்த நிலை நீங்கி அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு இஸ்லாமிய பொருளாதாரமே!
ரஸ்மின் misc

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை