அதிமுக அரசின் ஓராண்டு சாதனை?


அதிமுக அரசின் ஓராண்டு சாதனை?

ஓராண்டுக்கு முன் நடந்த பொதுத் தேர்தல் அதிமுக கூட எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது.ஜெயலலிதாவிடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மக்கள் நம்பியது தவறு என்பதை அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கைமூலமும் காட்டி வருகிறார்மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றுவிட்டோம்நம்மை யாரும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சிகளைக்கூட மதிக்காமல் தான் நினைத்தைச் செய்து வருகிறார் ஜெயலலிதா.
ஒரு வருடத்தை இவர் பூர்த்தி செய்துள்ள நிலையில் தன் ஆட்சியின் சாதனையைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகசட்டசபை நாட்களை இரண்டு நாட்கள் அதிகமாக்கி ஜால்ராக்களை வைத்து முதல்வர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளார்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று தங்களைத்தானே சொல்லிக்கொள்ளும் மமக பேராசிரியர்புகழின் உச்சத்திற்கே போய் பேசியுள்ளார்ஓய்வின்றி உறக்கமின்றி தேர்தலில் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் என்று ஜவாஹிருல்லாஹ் பேசும் போதுஆளும் கட்சியின் மேசைதட்டுதல் விண்ணைத் தொட்டதுமேலும் நேரடியாகவும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்தும் கூறி வந்துள்ளார்.
ஓய்வின்றி உறக்கமின்றி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் என்று புகழ்ந்த ஜவாஹிருல்லாஹ்ஜெயலலிதாமுஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பேன் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்இடஒதுக்கீட்டின் அளவை இதுவரை உயர்த்தினாராஅல்லது அது தொடர்பாக ஒரு வார்த்தையாவது பேசினாரா?
பிறகு எதற்காக இந்த ஜால்ரா?
ஜெயா அரசின் ஒரு வருட சாதனைகள்தான் என்ன?
விலையில்லா அரிசிமிக்சிகிரைண்டர்பசுமைவீடுகள்மின்விசிறிகறவைமாடுகள்விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக்காப்பீட்டு திட்டம்தாலிக்குத் தங்கம் என்று தங்கள் சாதனைகளை கூறியுள்ளார்கள்.
ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசங்கள் கிடைக்கும் என்று அறிவித்தவர்கள்ஆட்சிக்கு வந்தவுடன்ஏராளமான புதிய விதிகளைச் சேர்த்து ஏராளமானோருக்குக் கிடைக்காமல் இருக்கும் வேலை செய்தனர்.
தமிழகத்தில் ஒருகோடிக்கு மேல் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கிறார்கள்இவர்கள் அனைவருக்கும் இந்த இலவசங்கள்வழங்கினார்களாஇல்லைஇதில் பத்து சதவிகித மக்களுக்குக்கூட வழங்கவில்லைவிளம்பரத்திற்கு பத்து நபர்களுக்குகொடுத்துவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறார்கள்.
ஜெயா அரசின் வேதனைகள் என்ன?
மூன்று மாதத்தில் மின்வெட்டைச் சரிசெய்வேன் என்று கூறினார்ஆனால் வருடம் ஒன்று ஓடிவிட்டதுமின்வெட்டுஅதிகரித்தது தான் மிச்சம்.
 மின்வெட்டு அதிகரித்ததுடன் மின்கட்டணமும் கடுமையாக உயர்வு
 மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை கடும் உயர்வு
 பத்திரக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு
 வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டண உயர்வு
 பல பொருட்களுக்கு வாட் வரி உயர்வு
இப்படி ஏராளமான பொருட்களின் விலை உயர்வை இந்த ஓராண்டு கால ஜெயா அரசின் சாதனையாகக் கூறலாம்.
மேலும் வங்கிக் கொள்ளைகள்கொலைகள்வழிப்பறிகள் என்று தொடராக சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பது.
இந்த விலை உயர்வு தொடர்பாக குறைநிறைகளைப் பேச சட்டசபையில் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பூட்டு.
அமைச்சர்கள் வாய்திறக்க வாய்பில்லாத நிலை.
அனைத்துக்குமே முதல்வர் 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும் நிலை.
குறை நிறைகளைத் தெரிந்து கொள்ள வாரத்திற்கு ஒரு முறை பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்று வாக்குறுதிகொடுத்த முதல்வர் இரண்டு மூன்று முறை சந்தித்ததோடு நிறுத்திக் கொண்ட சாதனை.
அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நாள்தோறும் பந்தாடிவருவது.
இது போன்ற சாதனைகள்தான் ஜெயல்லிதா அரசில் ஓராண்டில் நிறைந்து காணப்படுகிறதுஉண்மையில் நல்லாட்சி செய்யமுதல்வர் விரும்பினால் சட்டசபை குறைநிறைகளை விவாதிக்கும் இடமாக மாற இடமளிக்க வேண்டும்ஜால்ராதட்டிகளை அடக்கி வைக்க வேண்டும்.
மக்களின் நலன் பயக்கும் திட்டங்களைத் தீட்டுவதோடு அதனைச் செயல்படுத்த வேண்டும்நேர்மையாக விமர்சனம்செய்யும் தொலைக்காட்சிகள்பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் படித்து அதன் உண்மை நிலைகளைக் கண்டறிந்துஅதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜால்ரா தட்டிகளை மட்டும் வைத்து ஆட்சி நடத்த எண்ணினால் திமுகவிற்கு ஏற்பட்ட நிலையைவிட மோசமான நிலையைஅதிமுக சந்திக்க நேரிடும்.
நன்றி தீன் குலபெண்மணி 

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!