குர்'ஆன் உண்மை இறைவேதம்.பைபிள் உளறுவேதம்


குர்'ஆன் உண்மை இறைவேதம்.பைபிள் உளறுவேதம்

சர்ச்சில் இஸ்லாத்தை பற்றி தப்பும் தவறுமாக சொல்லி மூளை சலவை செய்யப்படுகிறது. இஸ்லாம் சாத்தானின் பெரிய சூழ்ச்சி என்று அந்த அறிவில்லாதவன் சொன்னான்.

அவனை பொய்பிக்க நூற்றுக்கணக்கில் வசனங்களை குர்'ஆனில் இருந்து அள்ளி போட்டுவிடலாம். அறிவியல் வசனங்கள், தீர்கமான தீர்கதரிசனங்கள், நுண்ணிய வரலாற்று துணுக்குகள் எத்தனை குர்'ஆனில் !!!!

இருந்தாலும் இவனுக்கு மண்டையில் குட்டி தெளிவை வர வைக்க ஒரு வசனமே போதும்.

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். [அல் குர்'ஆன் 35 :6 ]

1 . சாத்தான் உங்களுக்கு பகைவனாக இருக்கிறான் என்று சாத்தான் சொல்வானா அல்லது உங்களுக்கு நண்பன் நான் என்று சொல்வானா ?

2 . நீங்கள் என்னை பகைவனாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சாத்தான் சொல்வானா ? அல்லது நீங்கள் என்னை நண்பனாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சாத்தான் சொல்வானா ?

3 . சாத்தான் தன்னை பின்பற்றுவோருக்கு நரகம் என்று சொல்வானா ? அல்லது சொர்க்கம் என்று கூறி ஆசை வார்த்தை காட்டுவானா ?


------------------------------
-----------------

குர்'ஆனின் அளவிலா அற்புதங்களில் ஒரு நுண்ணிய வரலாற்று அற்புதத்தை எடுத்துக்காட்டாக உங்கள் முன் வைக்கிறேன்.

எகிப்திய அரசர்களை "பாரோ", "pharaoh", "தமிழ் பைபிளில் பார்வோன்", "குர்'ஆனில் பிர்'அவ்ன்" என்று அழைப்பதுண்டு. ஆனால் ஒரு நுட்பமான விஷயத்தை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும். எகிப்திய வரலாறு காலரீதியாக 8 பகுதிகளாக பிரிக்கபடுகிறது.

1. Early dynasty
2. Old kingdom
3. First intermediate period
4. Middle kingdom
5. Second intermediate period
6. New kingdom
7. Third intermediate period
8. Late period

பார்க்க : http://en.wikipedia.org/wiki/List_of_ancient_Egyptian_dynasties

இதில் அரசர்களை "பாரோ" என்று கூறும் வழக்கம் New Kingdom இல் இருந்துதான் ஆரம்பம் ஆகிறது.

பார்க்க : http://en.wikipedia.org/wiki/Pharaoh

கீழ்வருமாறு இந்த லிங்க் தனது இரண்டாவது வரியில் சொல்கிறது.

The title of Pharaoh started being used for the king during the New Kingdom, specifically during the middle of the eighteenth dynasty.

"Eighteenth dynasty" என்றால் என்ன ?

http://en.wikipedia.org/wiki/Eighteenth_dynasty_of_Egypt

அதுவும் "middle of the eighteenth dynasty" இல் தான் "பாரோ" என்று கூறும் வழக்கம் ஆரம்பித்ததாம்.

இன்னும் சரியாக சொல்லப்போனால் 1351 - 1334 BC இல் ஆண்ட "அகெனாதன் (Akhenaten)" எனும் அரசர்தான் முதன் முதலாக "பாரோ" என்று அழைக்கபட்டதர்க்கான சான்று உள்ளது. இருந்தாலும் நாம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு உதவி செய்வோம் - New Kingdom ஆரம்பத்திலிருந்தே "பாரோ" என்று ராஜாக்களை அழைத்தார்கள் என்று எடுத்துக்கொள்வோம்.

இப்போது பைபிளிலும், குர்'ஆனிலும் கூறப்பட்டுள்ள இரண்டு கதாபாத்திரங்களை எடுத்துக்கொள்வோம். இது குர்'ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இன்னொரு மிகப்பெரிய சான்று.

1. Joseph (பழைய ஏற்பாடு யோசேப்பு), குர்'ஆனின் யூசுப் (அலை).
2. Moses (பழைய ஏற்பாடு மோசே), குர்'ஆனின் மூஸா (அலை).

இருவரும் எகிப்தில் இருந்த வரலாற்றை குர்'ஆனும் சொல்கிறது, பைபிளும் சொல்கிறது.

இந்த இருவரும் எகிப்தின் 8 காலகட்டங்களில் எந்த காலகட்டத்தில் அங்கே இருந்தார்கள் என்று கவனிப்பது மிக மிக முக்கியம்.

1 . யோசேப்பு, "Hyskos (ஹிஸ்கொஸ்)" மன்னர்கள் எகிப்தை ஆண்ட "Second intermediate period" இல் எகிப்தில் இருந்தார்.

2. மோசே, "Ramses II" எனும் மன்னன் ஆட்சி செய்த "New Kingdom" காலத்தில் எகிப்தில் இருந்தார்.

"New Kingdom" காலத்தில் "middle of the eighteenth dynasty" இல் தான் "பாரோ" என்று கூறும் வழக்கம் ஆரம்பித்தது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் "யோசேப்பின்" காலத்தில் எகிப்தில் மன்னர்களை "பாரோ" என்று அழைக்கும் முறை இல்லவே இல்லை. யோசேப்பு இறந்து பல பல வருடங்களுக்கு பின்புதான் இந்த வழக்கம் ஆரம்பம் ஆகிறது.

இப்போது குர்'ஆனையும், பைபிளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய நேரம் :
---------------------------------------------
[ஆதியாகமம் 12]

17. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.

18. அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?

20. பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

யோசேப்பின் காலத்திலேயே "பாரோன்" என்று கூறும் வழக்கம் கிடையாது. யோசெப்புக்கெல்லாம் பாட்டனாரான "ஆபிரகாம்" காலத்தில் "பாரோன்" என்று கூறும் வழக்கம் கிடையவே கிடையாது. ஆனால் பைபிள் அந்த மன்னனை "பாரோன்" என்று சொல்லி உளறுகிறது.
----------------------------------------------
[ஆதியாகமம் 41]

14. அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.

46. யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.

மறுபடியும் உளறல். யோசேப்பின் காலத்தில் இருந்த ராஜாவை "பாரோன்" என்று பைபிள் சொல்லி உளறுகிறது.
------------------------------------------------------
[யாத்திராகமம் 2]

15. பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.

மோசே காலத்தில் இருந்தவனும் "பாரோ". ஆக பைபிளின் கணக்கு படி பார்த்தால் எகிப்தை ஆண்டவன் எல்லாருமே "பாரோ". வரலாறு பைபிளை பொய் என்று நிரூபித்துவிட்டது.
-------------------------------------------------------

இப்போது குர்'ஆனை பார்த்தால் அதிசயமாக இருக்கிறது. இந்த சின்னஞ்சிறு விஷயத்தில் கூட குர்'ஆன் துல்லியத்தை காட்டுகிறது. யோசேப்பின் காலத்தில் எகிப்தை ஆண்ட மன்னனை குறிக்கும் போது "அரசன் (அரபியில் மலிக், malik)" என்று மட்டுமே குர்'ஆன் குறிப்பிடுகிறது. ஒரு இடத்தில் கூட அந்த மன்னனை "பாரோ" என்று குர்'ஆன் அழைப்பதே இல்லை.

மோசேவின் காலத்தில் வாழ்ந்த அரசனை "பாரோ" (பிர்'அவ்ன்) என்று மட்டுமே குர்'ஆன் குறிப்பிடுகிறது.
--------------------------------------------------------

யூசுப் (அலை) எகிப்தில் இருந்த காலம் :

. . . பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று அரசர் கூறினார். [அல் குர்'ஆன் 12:43]

அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; . . . 
                                                                                   [அல் குர்'ஆன் 12:50]

இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; . . . 
                                                                                   [அல் குர்'ஆன் 12:54]

நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்;. . .
                                                                                    [அல் குர்'ஆன் 12:72]

. . .அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார். . .                                                                                    [அல் குர்'ஆன் 12:76]

--------------------------------------------------------------
மூஸா (அலை) எகிப்தில் இருந்த காலம் :

ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; . . . [அல் குர்'ஆன் 8:52]

மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள் . . . [அல் குர்'ஆன் 14:6]

. . . ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். . . [அல் குர்'ஆன் 27:12]
------------------------------------------------------

குர்'ஆனை பார்த்தால் யூசுபின் காலத்தில் இருந்தவர் "அரசன் (மலிக்)". மூசாவின் காலத்தில் இருந்தவன் "பிர்'அவ்ன் (பாரோ)" .

இது குர்'ஆன் உண்மை இறைவேதம் என்பதற்கு இன்னுமொரு அத்தாட்சி. பைபிள் உளறுவேதம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
www.jesusinvites.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை