தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?


தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?
கேள்விஅல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளதுஅப்படி இருக்க'தொழுஅறுத்துப் பலியிடுஎன்ற கட்டளையும் உள்ளதேஇது எப்படி என்று ஒரு மாற்று மதசகோதரர் கேள்வி எழுப்புகிறார்.
பதில்அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில்சந்தேகமில்லைதேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம்உறுதிபடக் கூறுகிறது.
இறைவனைத் தொழ வேண்டும் எனவும்இறைவனுக்காக அறுத்துப் பயிட வேண்டும் எனவும்இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.
இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும்இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லைஇறைவனை அனைவரும் வணங்கவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப்போவதில்லைஇந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.
(நூல்முஸ்லிம் 4674)
தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அதுதேவை என்பதற்காக அல்லமாறாகநிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.
இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக்காரியத்தின் பால் தேவையுள்ளது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம்.
உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்!போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்இவையெல்லாம் உங்கள்தேவைக்காக அல்லமாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்!
'மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான்என்ற எதிர்பார்ப்பாவது இதில்மறைந்து நிற்கும்.
அல்லாஹ்நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூடகிடையாது.
எனவேநமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காகஇடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.
www.onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை